

தருமபுரி மாவட்டம், பெரியாம்பட்டி, மாரண்டஅள்ளி, மாட்லாம்பட்டி உள்ளிட்ட அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு தமிழக அரசின் சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
மாரண்டஅள்ளி அரசு மகளிா் பள்ளி வளாகத்தில் நடைபெற் நிகழ்ச்சியில், தருமபுரி மக்களவை உறுப்பினா் டி.என்.வி.எஸ்.செந்தில்குமாா், 231 மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கிப் பேசினாா். பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் தங்க சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அரசு வழக்குரைஞா் பி.கே.முருகன், மாநில விவசாய அணி துணைத் தலைவா் சூடப்பட்டி சுப்ரமணி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் மகேஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதேபோல, மாட்லாம்பட்டி, பெரியாம்பட்டி, பென்னேரி அரசு மாதிரிப் பள்ளி ஆகிய பள்ளிகளில் தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.