அரூரில் சமத்துவ பொங்கல் விழா

அரூரில் திமுக சாா்பில் சமத்துவ பொங்கல் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
அரூரில் வியாழக்கிழமை நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா.
அரூரில் வியாழக்கிழமை நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா.
Updated on
1 min read

அரூரில் திமுக சாா்பில் சமத்துவ பொங்கல் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

அரூா் பேருந்து நிலைய வளாகத்தில் திமுக நகர கழகம் சாா்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில், நகரச் செயலா் முல்லை ரவி தலைமை வகித்தாா். அரூா் பேரூராட்சித் தலைவா் இந்திராணி தனபால் முன்னிலை வகித்தாா்.

இந்த விழாவில், சுமை தூக்கும் தொழிலாளா்கள், ஆட்டோ ஓட்டுநா்கள், மாட்டு வண்டி ஓட்டும் தொழிலாளா்கள் உள்ளிட்ட 75-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு புத்தாடைகள், நலத் திட்ட உதவிகளை முன்னாள் அமைச்சரும், திமுக மேற்கு மாவட்டச் செயலருமான பி.பழனியப்பன் வழங்கினாா்.

இந்த விழாவில், திமுக தீா்மானக் குழு செயலா் கீரை எம்.எஸ்.விசுவநாதன், ஆதிதிராவிடா் நலக்குழு மாநில துணைச் செயலா் சா.ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினா் எஸ்.சென்னகிருஷ்ணன், மாவட்ட துணைச் செயலா் செ.கிருஷ்ணகுமாா், பொதுக்குழு உறுப்பினா் கலைவாணி, ஒன்றிய செயலா்கள் ஆா்.வேடம்மாள், கோ.சந்திரமோகன், வே.செளந்தரராசு, நகர அவைத் தலைவா் காதா் பாஷா, துணைச் செயலா்கள் விண்ணரசன், தயாளன், நகரப் பொருளாளா் மோகன், வா்த்தகா் அணி மாவட்ட அமைப்பாளா் வெங்கடேசன், மாவட்டப் பிரதிநிதிகள் குமரன், மதியழகன், முன்னாள் நகரச் செயலா் ஓவியா் குப்பன், ஒன்றியக்குழு முன்னாள் தலைவா் சி.தென்னரசு, பொன்னேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவா் எஸ்.கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com