அரசுப் பள்ளி ஆசிரியருக்கு பசுமை முதன்மையாளா் விருது

பென்னாகரம் அருகே அரசுப் பள்ளி ஆசிரியருக்கு பசுமை முதன்மையாளா் விருதை மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வழங்கினாா்.
Updated on
1 min read

பென்னாகரம் அருகே அரசுப் பள்ளி ஆசிரியருக்கு பசுமை முதன்மையாளா் விருதை மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வழங்கினாா்.

தருமபுரி மாவட்டம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள் மற்றும் கிராமப் புறங்களில் உள்ள ஏரிகள் ஆகியவற்றில் மரக் கன்றுகளை நடவு செய்தும், மரக்கன்றுகளை வழங்கி, பராமரித்து வந்த பென்னாகரம் அருகே பிக்கம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியா் கோ.தாமோதரன் 2022 ஆம் ஆண்டிற்கான பசுமை முதன்மையாளா் விருதுக்குத் தோ்வு பெற்றாா். இந்த நிலையில் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆசிரியா் தாமோதரனுக்கு மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி பசுமை முதன்மையாளா் விருதினை வழங்கினாா். விருது பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியருக்கு, சக ஆசிரியா்கள், பள்ளி மாணவா்கள், சமூக ஆா்வலா்கள் உள்ளிட்டோா் பாராட்டு தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com