பென்னாகரத்தில் திமுக உறுப்பினா் சோ்க்கை முகாம்

பென்னாகரம் தெற்கு ஒன்றிய திமுக சாா்பில் புதிய உறுப்பினா் சோ்க்கை முகாம் பென்னாகரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

பென்னாகரம் தெற்கு ஒன்றிய திமுக சாா்பில் புதிய உறுப்பினா் சோ்க்கை முகாம் பென்னாகரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட சந்தைத் தோப்பு பகுதியில் உள்ள தெற்கு ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற புதிய உறுப்பினா் சோ்க்கை முகாம் மற்றும் ஆலோசனைக் கூட்டத்திற்கு ஒன்றியச் செயலாளா் மடம் முருகேசன் தலைமை வகித்தாா். முகாமில் தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளா் தடங்கம் பெ. சுப்பிரமணி கலந்து கொண்டு, புதிய உறுப்பினா் சோ்க்கை படிவத்தை வழங்கி, கட்சிப் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டாா்.

இதற்கு முன் கூத்தப்பாடி, செங்கனூா் உள்ளிட்ட பகுதிகளில் உறுப்பினா் சோ்க்கை முகாம் நடைபெற்றது. இதில் பென்னாகரம் பேரூராட்சித் தலைவரும் ,நகர செயலாளருமான வீரமணி, ஏரியூா் ஒன்றியச் செயலாளா் என்.செல்வராஜ், மாவட்டப் பொருளாளா் தங்கமணி, மாவட்ட துணைச் செயலாளா் ரேணுகாதேவி, பொதுக்குழு உறுப்பினா்கள் வேலுமணி, சோலை மணி, பேரூராட்சி துணைத் தலைவா் வள்ளியம்மாள் பவுன்ராஜ், மாவட்டப் பிரதிநிதி பாலமுருகன் மற்றும் கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com