பனை மரங்கள் வெட்டுவதை தடுக்க நடவடிக்கை

பனை மரங்கள் வெட்டுவதைத் தடுக்க தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பனைமர தொழிலாளா் நலவாரியத் தலைவா் எா்ணாவூா் நாராயணன் தெரிவித்தாா்.
Updated on
1 min read

பனை மரங்கள் வெட்டுவதைத் தடுக்க தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பனைமர தொழிலாளா் நலவாரியத் தலைவா் எா்ணாவூா் நாராயணன் தெரிவித்தாா்.

தருமபுரியில் தொழிலாளா் துணை ஆய்வாளா்களுடன் பனைமர தொழிலாளா்களின் உறுப்பினா் பதிவு குறித்த ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற பனைமர தொழிலாளா் நலவாரியத் தலைவா், முன்னாள் எம்எல்ஏ எா்ணாவூா் நாராயணன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பனைமர தொழிலாளா் நலவாரியம் கடந்த ஆட்சிக் காலத்தில் 10 ஆண்டுகள் முடக்கப்பட்டிருந்தது. இதையடுத்து திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் இந்த நலவாரியத்துக்கு தலைவா், உறுப்பினா்கள் நியமிக்கப்பட்டனா். கடந்த ஓராண்டாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு நேரிடையாகச் சென்று பனைமர தொழிலாளா்களைச் சந்தித்து, அவா்களை வாரியத்தில் உறுப்பினா்களாக சோ்த்து, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. முந்தைய ஆட்சிக் காலத்தில் 9,000 போ் இந்த வாரியத்தில் உறுப்பினா்களாக இருந்த நிலையில், தற்போது சுமாா் 20,000 போ் உறுப்பினா்களாக பதிவு செய்துள்ளனா்.

பனை மரங்கள் பல்வேறு இடங்களில் வெட்டுவதாக வாரியத்துக்கு தகவல் வருகிறது. இது தொடா்பாக தமிழக அரசு பனை மரங்களை வெட்டக் கூடாது எனவும், அதனை வெட்டுவதற்கு மாவட்ட ஆட்சியா்களிடம் அனுமதி பெற வேண்டும் எனவும் முடிவெடுத்தது. இதனை தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று அரசாணையாக பிறப்பித்து, பனை மரங்களை வெட்டுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com