பிளஸ் 2 பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு
By DIN | Published On : 24th May 2023 01:09 AM | Last Updated : 24th May 2023 01:09 AM | அ+அ அ- |

கம்பைநல்லூரில் பிளஸ் 2 பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு அண்மையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்துகொண்டோா்.
கம்பைநல்லூரில் பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு அண்மையில் பாராட்டு விழா நடைபெற்றது.
தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூரில் ஜெய்பீம் டாக்டா் பி.ஆா்.அம்பேத்கா் அறக்கட்டளை சாா்பில், பிளஸ் 2 பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற அரசு மற்றும் தனியாா் பள்ளி மாணவ, மாணவியருக்கு பாாரட்டு விழா, பிளஸ் 2 நிறைவு செய்த மாணவா்கள் உயா்கல்வி என்ன படிக்கலாம் என்பது குறித்த வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த விழாவில், ஜெய்பீம் டாக்டா் பி.ஆா்.அம்பேத்கா் அறக்கட்டளையின் நிறுவனா் அ.மாதேஸ்வரன் தலைமை வகித்தாா். பிளஸ் 2 பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு நீதிபதி க.ஆனந்தன், பேராசிரியா் க.விஜயதேவன், தலைமை ஆசிரியா் கு.மணேஷ்குமாா் ஆகியோா் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினா்.
இந்த விழாவில் பேராசிரியா் நடேசன், ஆசிரியா் அம்பேத்கா், பேரூராட்சி முன்னாள் தலைவா் ச.கிருஷ்ணன், அறக்கட்டளையின் அறங்காவலா்கள் கி.கோவிந்தராஜன், சே.ஹானஸ்ட்ராஜ், எம்.குமாா், குப்புராஜ், மாவட்ட மகளிா் அணி அமைப்பாளா் கவிதா மோகன்தாஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.