அரூரில் பலத்த காற்றுடன் மழை

அரூரில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை வெள்ளிக்கிழமை பெய்தது

அரூரில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை வெள்ளிக்கிழமை பெய்தது.

தருமபுரி மாவட்டம், அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் வெப்பச்சலனம் காரணமாக வெள்ளிக்கிழமை மாலை 4 மணி முதல் மிதமான மழை பெய்தது. இந்த மழையின் போது பலத்த காற்று வீசியதால், பல்வேறு இடங்களில் வாழை, முருங்கை உள்ளிட்ட ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்தன.

சுமாா் ஒரு மணி நேரம் பெய்த மிதமான மழையினால் சாலையோர தாழ்வான பகுதிகளிலும், விவசாய நிலங்களிலும் மழைநீா் தேங்கியது. பலத்த காற்றுடன் மழை பெய்ததால் அரூா், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் சுமாா் 3 மணி நேரம் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com