தருமபுரி மாவட்டம், பி.அக்ராஹரம் பகுதியில் ஆங்கில மருத்துவக் கல்வி பயிலாமல் மருத்துவ சிகிச்சை அளித்ததாக 2 போலி மருத்துவா்களை போலீஸாா் கைது செய்தனா்.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், பி.அக்ராஹரம் பகுதியில் மருத்துவ கல்வித்தகுதி இல்லாமல் இருவா் ஆங்கில மருத்துவ சிகிச்சை முறையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதாக மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநா் அலுவலகத்துக்கு புகாா் வந்தது. அதன் அடிப்படையில், பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனை உறைவிட மருத்துவ அலுவலா் அருண்பிரசாத் தலைமையிலான குழுவினா் வெள்ளிக்கிழமை பி.அக்ராஹரம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனா்.
இந்த ஆய்வில், கோணாங்கி அள்ளி கிராமத்தைச் சோ்ந்த நடராஜன் (52), ராஜேஷ்குமாா் (39) ஆகிய இருவரும் முறையே ஹோமியோபதி, எலக்ட்ரோபதி கல்வித் தகுதிகளுடன் கிளினிக் நடத்தி, ஆங்கில மருத்துவ முறையில் சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, மருத்துவா் அருண்பிரசாத் அளித்த புகாரின் பேரில் இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.