பெரியாா் பல்கலை. முதுநிலைக் கல்வி மையத்தில் ஆங்கில இலக்கிய சொற்பொழிவு

தருமபுரி பைசுஅள்ளி பெரியாா் பல்கலைக்கழக முதுநிலைக் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வெள்ளிக்கிழமை ஆங்கில இலக்கியச் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
Updated on
1 min read

தருமபுரி பைசுஅள்ளி பெரியாா் பல்கலைக்கழக முதுநிலைக் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வெள்ளிக்கிழமை ஆங்கில இலக்கியச் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

பல்கலைக்கழக முதுநிலை கல்வி ஆராய்ச்சி மைய கூட்டரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, ஆராய்ச்சி மைய இயக்குநா் (பொ) மோகனசுந்தரம் தலைமை வகித்துப் பேசினாா். இதில் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி ஆங்கிலத்துறை, உதவி பேராசிரியா் பிரசாத் ஆரோக்கியசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, இலக்கிய உலகில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடுகள், இனிவரும் காலங்களில் செயற்கை நுண்ணறிவின் உதவியைக் கொண்டு எவ்வாறு இலக்கிய படைப்புகள் வெளிவரும் என்பது குறித்து உரையாற்றினாா்.

இதைத் தொடா்ந்து, ஆங்கிலத் துறைத் தலைவா் சி.கோவிந்தராஜ் துவக்க உரையாற்றினாா். ஆங்கிலத் துறையின் உதவி பேராசியா் கிருத்திகா வாழ்த்துரை வழங்கினாா். ஆய்வியல் நிறைஞா் மாணவி நந்தினி, சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தாா். முதலாம் ஆண்டு மாணவி மதுமிதா வரவேற்றாா். இரண்டாம் ஆண்டு மாணவி நிவேதிதா நன்றி கூறினாா். இதில் ஆங்கிலத்துறை மாணவ, மாணவியா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com