ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க அனுமதி

23 நாள்களுக்கு பிறகு பரிசல் இயக்க அனுமதி.

News image

சின்னாறு பரிசல் துறையில் பரிசல் பயணம் மேற்கொள்ளும் பென்னாகரம் எம்எல்ஏ ஜிகே மணி, உடன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள்.

Updated On :8 ஆகஸ்ட் 2024, 8:58 am IST

பென்னாகரம்: காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 8,000 கன அடியாக குறைந்துள்ளதால், ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

கேரளம் மற்றும் கர்நாடக மாநிலங்களின் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்ததன் காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு வரும் நீரின் வரத்து அதிகரித்து இருந்தது. இதனால் காவிரி ஆற்றில் வினாடிக்கு 2.30 லட்சம் கனஅடி வீதம் உபரி நீர் காவிரி ஆற்றின் வெளியேற்றப்பட்டது.

தொடர் நீர்வரத்து அதிகரிப்பின் காரணமாக ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் கடந்த 23 நாள்களாக தருமபுரி மாவட்ட நிர்வாகமானது பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கும் காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்வதற்கும் தடை விதித்து வந்தது.

தற்போது காவிரி ஆற்றில் வரும் நீரின் அளவு தொடர்ந்து குறைந்து, வியாழக்கிழமை நிலவரப்படி வினாடிக்கு 8,000 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி. சாந்தி உத்தரவின் பெயரில் 23 நாள்களுக்குப் பிறகு ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இதனை அடுத்து பென்னாகரம் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் ஜிகே மணி, பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுருளிநாதன், ஷகிலா ஆகியோர்கள் ஒகேனக்கல் சின்னாறு பரிசல் துறையில் இருந்து மணல்மேடு வரை பரிசல் பயணத்தினை தொடங்கி வைத்தனர்.

இதில் பென்னாகரம் ஒன்றிய குழு தலைவர் கவிதா ராமகிருஷ்ணன், துணைத் தலைவர் அற்புதம் அன்பு, கூத்தப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கர், பாஜக மாநில மீனவரணி செயலாளர் மூர்த்தி, ஒகேனக்கல் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலாஜி, மாவட்டத் தலைவர் செல்வகுமார், ஒன்றிய குழு உறுப்பினர் கெம்பு ராஜ், அதிமுக மீனவர் அணி மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.