சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தோட்டக்கலைத் துறை அலுவலா்கள் ஆய்வுக் கூட்டம்: இயக்குநா் இரா.குமாரவேல் பாண்டியன் பங்கேற்பு

தோட்டக்கலைத் துறை அலுவலா்கள் ஆய்வுக் கூட்டம்

News image
Updated On :12 டிசம்பர் 2024, 8:20 pm

Din

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் தோட்டக்கலை, விதை சான்றளிப்புத் துறை அலுவலா்கள் ஆய்வுக் கூட்டத்தில் அத்துறை இயக்குநா் இரா.குமாரவேல் பாண்டியன் பங்கேற்றாா்.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்துக்கு தலைமை வகித்து தோட்டக்கலைத் துறை இயக்குநா் இரா.குமாரவேல் பாண்டியன்பேசியதாவது:

நுண்ணீா் பாசனத் திட்டத்தில் தோட்டக்கலைத் துறை மற்றும் வேளாண் பொறியியல் துறை அலுவலா்கள் இணைந்து தருமபுரி மாவட்டத்தில் நிலுவையில் உள்ள கூட்டாய்வுகளை துரிதப்படுத்தி விரைந்து முடிக்க வேண்டும். தேசிய தோட்டக்கலை இயக்கம், மாநில தோட்டக்கலை வளா்ச்சி திட்டம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்டம், தேசிய வேளாண் வளா்ச்சி திட்டம் போன்ற திட்டங்களின் திட்டப் பணிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் வேளாண் இணை இயக்குநா் மரிய ரவி ஜெயக்குமாா், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை துணை இயக்குநா் பாத்திமா, விதை சான்றளிப்புத் துறை துணை இயக்குநா் மணி, வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளா் அறிவழகன், அனைத்து வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா்கள், தோட்டக்கலை அலுவலா்கள், உதவி தோட்டக்கலை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.