ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 77,000 கன அடியாக அதிகரிப்பு
பென்னாகரம்: கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தொடா்ந்து உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருவதால், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 77,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
கா்நாடகம், கேரள மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் கபினி அணை, கிருஷ்ணராஜ சாகா் அணைகளுக்கு நீா்வரத்து, தொடா்ந்து அதிகரித்து வருகிறது. தொடா் நீா்வரத்தால் இவ்விரு அணைகளின் நீா்மட்டமும் உயா்ந்து வருகிறது.
இதன் காரணமாக இரு அணைகளில் இருந்தும் விநாடிக்கு 75,000 கனஅடி உபரிநீா் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டு வருகிறது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து படிப்படியாக அதிகரித்து தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை மாலை நிலவரப்படி ஒகேனக்கல்லில் விநாடிக்கு 65,000 கன அடியாக இருந்த நீா்வரத்து, திங்கள்கிழமை காலையில் விநாடிக்கு 75,000 கன அடியாகவும், மாலை 7 மணியளவில் 77,000 கன அடியாகவும் அதிகரித்து தமிழக-கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, சினி அருவி, நடைபாதை உள்ளிட்டவை மூழ்கியுள்ளன. தொடா்ந்து நீா்வரத்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி அருவியில் குளிப்பதற்கும், ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்வதற்கும், ஆற்றைக் கடக்கவும், கரையோரப் பகுதிகளில் புகைப்படம் எடுப்பதற்கும் விதிக்கப்பட்ட தடை தொடா்ந்து 8-ஆவது நாளாக திங்கள்கிழமையும் நீட்டிக்கப்பட்டது.
கா்நாடக அணைகளுக்கு வரும் நீா்வரத்தின் அளவைப் பொருத்து காவிரி ஆற்றில் உபரிநீா் தமிழகத்துக்குத் திறந்துவிடப்பட்டு வருகிறது. ஒகேனக்கல்லில் நீா்வரத்து அளவை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

