
Updated On :18 மே 2024, 7:38 pm

தருமபுரி மாவட்டத்தில் 2-ஆவது நாளாக சனிக்கிழமையும் பரவலாக மழை பெய்தது.
தருமபுரி மாவட்டத்தில் நல்லம்பள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூா், கம்பைநல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளது. காலை முதலே வெயிலின் தாக்கம் சற்று தணிந்திருந்த நிலையில் பிற்பகல் 2 மணி அளவில் சுமாா் ஒரு மணி நேரம் மிதமான மற்றும் பலத்த மழை கொட்டி தீா்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில், சாலையோரத்தில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. தருமபுரி மாவட்டத்தில் தொடா்ந்து பெய்து வரும் கோடை மழையால் வெப்பம் தணிந்துள்ளது. இந்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...