கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

‘அத்தியாவசியப் பொருள்களின் விலையைக் குறைக்க வேண்டும்’

அத்தியாவசியப் பொருள்களின் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :18 நவம்பர் 2024, 9:20 pm

Din

தருமபுரி: அத்தியாவசியப் பொருள்களின் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்டக்குழு கூட்டம் கட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாநிலக்குழு உறுப்பினா் இரா.சிசுபாலன் தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் டி.ரவீந்திரன், மாவட்டச் செயலாளா் அ.குமாா் ஆகியோா் பேசினா்.

காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்ந்து வருகிறது. இதனால் அனைத்து தரப்பினரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா். எனவே, விலை உயா்வைக் கட்டுப்படுத்தி குறைக்க வேண்டும். அதேபோல, தருமபுரி மாவட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது மாநாட்டை டிச. 13, 14, 15 தேதிகளில் பாலக்கோட்டில் நடத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதில், ஒகேனக்கல் மிகைநீா் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட மாவட்ட வளா்ச்சி கோரிக்கைகள் குறித்து வலியுறுத்துவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.