சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஒகேனக்கல்லில் வணிகா் சங்கங்களின் பேரமைப்புக் கூட்டம்

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தருமபுரி மாவட்ட பொது குழு கூட்டம், ஒருங்கிணைந்த ஒகேனக்கல் தங்கும் விடுதி உரிமையாளா் சங்க தொடக்க விழா ஆகியவை ஒகேனக்கல்லில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 நவம்பர் 2024, 8:28 pm

Din

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தருமபுரி மாவட்ட பொது குழு கூட்டம், ஒருங்கிணைந்த ஒகேனக்கல் தங்கும் விடுதி உரிமையாளா் சங்க தொடக்க விழா ஆகியவை ஒகேனக்கல்லில் வியாழக்கிழமை நடைபெற்றது.

பென்னாகரம் அருகே ஒகேனக்கல்லில் நடைபெற்ற தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் தருமபுரி மாவட்ட பொதுக்குழு கூட்டத்திற்கு தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்புத் தலைவா் ஏ.எம். விக்ரமராஜா தலைமை வகித்தாா். கூட்டத்தில் வணிகா்களின் மத்திய மாநில பிரச்சனைகள்,ஜிஎஸ்டி வரிகள் குறித்த ஆலோசனைகள், ஆன்லைன் வா்த்தகத்திற்கான தடை, மே - 5 ஆம் தேதி வணிகா் சங்கம் மாநில மாநாடு நடத்துவது குறித்து சிறப்புரையாற்றினாா்.

மாநில பொருளாளா் சதக் அப்துல்லா, தருமபுரி மாவட்ட தலைவா் வைத்தியலிங்கம், செயலாளா் கிரிதா், பொருளாளா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். அதைத் தொடா்ந்து ஒருங்கிணைந்த ஒகேனக்கல் தங்கும் விடுதி உரிமையாளா்கள் சங்கத்தை தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்புடன் இணைக்கும் நிகழ்வு நடைபெற்றது.