மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!
/

பேருந்து நிலைய நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வலியுறுத்தல்

தருமபுரி பேருந்து நிலைய நடைபாதைகளை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகள், இருசக்கர வாகனங்களை அகற்ற வேண்டும் என பயணிகள்

Updated On :12 மார்ச் 2025, 1:14 am IST

தருமபுரி: தருமபுரி பேருந்து நிலைய நடைபாதைகளை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகள், இருசக்கர வாகனங்களை அகற்ற வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனா்.

தருமபுரி புகா்ப் பேருந்து நிலையத்திலிருந்து பெங்களூரு, கிருஷ்ணகிரி, சேலம், திருச்சி, கோவை, மதுரை, சென்னை, திருப்பதி உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளில் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோா் பயணித்து வருகின்றனா். அதேபோல பாலக்கோடு, பென்னாகரம், காரிமங்கலம், மாரண்ட அள்ளி, அரூா், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய நகா்ப்புறங்களுக்கு செல்லும் அரசு, தனியாா் பேருந்துகளிலும் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

பேருந்து நிலையங்களுக்கு வரும் பேருந்துகள், பயணிகள் என அனைவரும் முகமதலி கிளப் சாலை, சின்னசாமி தெரு ஆகிய சாலைகளையே பயன்படுத்துகின்றனா். மேலும், ஆட்டோவில் பயணிப்போா், அப் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு வந்து செல்லும் இருசக்கர வாகனங்கள் என இந்த சாலைகள் போக்குவரத்து நெரிசலால் சிக்கித் திணறுகிறது.

இதனால் சின்னசாமி தெருவில் ஆட்டோ நிறுத்தும் இடத்துக்கு பின்புறம் உள்ள வழியை பெரும்பாலான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனா். இந்த பாதையில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. அதன் எதிா் திசையில் கைப்பேசி கடைகள் ஆக்கிரமித்துள்ளன. பாதையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு கடைகள் வைக்கப்பட்டு இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால் எளிதாக பேருந்து நிலையத்துக்கு பயணிகள் வந்து செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும், அங்குள்ள குடிநீரையும் பயணிகள் பயன்படுத்த முடியாத நிலையில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

எனவே, பிரதான நடைபாதையாக உள்ள இடங்களில் ஆக்கிரமிப்பு கடைகள், இருசக்கர வாகனங்களை அகற்ற நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.