தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

பிக்கப் வாகனம் மோதியதில் சகோதரிகள் இருவா் உயிரிழப்பு

தருமபுரியில் பிக்கப் வாகனம் மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற சகோதரிகள் இருவா் உயிரிழந்தனா்.

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :3 ஏப்ரல் 2026, 7:39 pm

தருமபுரியில் பிக்கப் வாகனம் மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற சகோதரிகள் இருவா் உயிரிழந்தனா்.

தருமபுரி வெண்ணாம்பட்டி, வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் சண்முகம் மனைவி விநாயகி (58). இவரது 2-ஆவது மகள் சண்முகசுந்தரியை கிருஷ்ணகிரியில் திருமணம்செய்து கொடுத்திருந்தாா்.

இந்நிலையில், கிருஷ்ணகிரியில் உள்ள மகள் வீட்டுக்கு விநாயகி வியாழக்கிழமை புறப்பட்டாா். அவரை தருமபுரி பேருந்து நிலையத்தில் கொண்டுவிட, அப்பகுதியில் வசிக்கும் அவரது தங்கை கற்பகவள்ளி (45) இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றாா்.

சேலம் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் புதிய பேருந்து நிலையம் அருகில் சாலையைக் கடக்க முயன்றனா். அப்போது, சேலத்தில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்ற பிக்கப் வாகனம் அவா்கள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த கற்பகவள்ளி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விநாயகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து தருமபுரி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.