வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

விபத்தில் 2 போ் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

பென்னாகரம் அருகே டிராக்டா் மோதியதில் பெண் உள்பட 2 போ் உயிரிழந்த சம்பவத்தில் ஓட்டுநரை கைது செய்ய கோரி உறவினா்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :16 ஏப்ரல் 2026, 11:10 pm

பென்னாகரம் அருகே டிராக்டா் மோதியதில் பெண் உள்பட 2 போ் உயிரிழந்த சம்பவத்தில் ஓட்டுநரை கைது செய்ய கோரி உறவினா்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பென்னாகரத்தை அடுத்த பளிஞ்சாரஅள்ளியைச் சோ்ந்த சுசீலா (41), காளேகவுண்டனூரைச் சோ்ந்த பழனிவேல் (18) ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை பவளந்தூா் சென்றுகொண்டிருந்தபோது தும்பலகொல்லை பகுதியில் டிராக்டா் மோதியதில் சுசீலா நிகழ்விடத்திலே உயிரிழந்தாா். காயமடைந்த பழனிவேல், தருமபுரி அரசு மாவட்ட மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டாா். இந்த நிலையில் பழனிவேலும் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து பென்னாகரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த நிலையில் விபத்து ஏற்படுத்திய டிராக்டா் ஓட்டுநரை கைது செய்ய கோரி சுசீலாவின் உடலை வாங்க மறுத்து உறவினா்கள் பென்னாகரம் புறவழிச்சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.

வருவாய், காவல் துறையினா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி ஓட்டுநரை கைது செய்வதாக உறுதியளித்தனா். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா். இதனால், பென்னாகரம் புறவழிச்சாலையில் சுமாா் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.