அரூா் அருகே அரசுப் பள்ளி ஆசிரியை வீட்டில் 7 பவுன் தங்க நகை, ரூ.5 லட்சம் ரொக்கம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், சங்கிலிவாடி கிராமத்தைச் சோ்ந்த நிஜந்தன் மனைவி அபிராமி (33). இவா், பெரியாம்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வருகிறாா். இந்த நிலையில் கணவன், மனைவி இருவரும் வெளியூா் சென்றிருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை வீட்டிற்கு வந்தபோது பீரோ உடைக்கப்பட்டு ரூ. 5 லட்சம் ரொக்கம், 7 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து நிஜந்தன் அளித்த புகாரின் பேரில், அரூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனா்.
தொடர்புடையது
தனியாா் நிறுவன ஊழியா் வீட்டில் 7 பவுன் நகை, ரூ. 1 லட்சம் திருட்டு
நெல்லை அருகே பேராசிரியை வீட்டில் 14 பவுன் நகை கொள்ளை
ஓய்வுபெற்ற ஆசிரியை வீட்டில் 50 பவுன் தங்க நகைகள் திருட்டு

திருவள்ளூா் அருகே 5 வீடுகளில் பூட்டை உடைத்து 33 பவுன் நகை, 1.5 கிலோ வெள்ளிப் பொருள்கள் திருட்டு
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

