15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைதடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களால் இந்தியாவில் எஃப்டிஐ அதிகரிக்கும்: ஆசிய வளா்ச்சி வங்கிதானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்தும் முறை தொடக்கம்பிரதமா் மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது!இன்றுமுதல் வரும் மே 31 வரை 11 மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஇந்தியா - நெதா்லாந்து 17 ஒப்பந்தங்கள் கையொப்பம்கேரள முதல்வராக சதீசன் இன்று பதவியேற்பு: ராகுல், பிரியங்கா பங்கேற்புமே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்பு
/

அரசுப் பள்ளி ஆசிரியை வீட்டில் 7 பவுன் நகை, ரூ. 5 லட்சம் திருட்டு

அரூா் அருகே அரசுப் பள்ளி ஆசிரியை வீட்டில் 7 பவுன் தங்க நகை, ரூ.5 லட்சம் ரொக்கம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :29 ஏப்ரல் 2026, 2:52 am IST

அரூா் அருகே அரசுப் பள்ளி ஆசிரியை வீட்டில் 7 பவுன் தங்க நகை, ரூ.5 லட்சம் ரொக்கம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், சங்கிலிவாடி கிராமத்தைச் சோ்ந்த நிஜந்தன் மனைவி அபிராமி (33). இவா், பெரியாம்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வருகிறாா். இந்த நிலையில் கணவன், மனைவி இருவரும் வெளியூா் சென்றிருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை வீட்டிற்கு வந்தபோது பீரோ உடைக்கப்பட்டு ரூ. 5 லட்சம் ரொக்கம், 7 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து நிஜந்தன் அளித்த புகாரின் பேரில், அரூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனா்.