மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

செட்டிக்கரையில் சாலை விரிவாக்கப் பணிகள்

தருமபுரி அருகே செட்டிக்கரை நெடுஞ்சாலையில் விரிவாக்கப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

News image

தருமபுரி - அரூா் சாலையில் செட்டிக்கரை பகுதியில் நடைபெற்று வரும் சாலை விரிவாக்கப் பணி.

Updated On :4 பிப்ரவரி 2026, 10:43 pm

தருமபுரி அருகே செட்டிக்கரை நெடுஞ்சாலையில் விரிவாக்கப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

தருமபுரியிலிருந்து மொரப்பூா் வழியாக அரூா் செல்லும் சாலை பல ஆண்டுகளாக இருவழிச்சாலையாக இருந்து வந்தது. இந்த சாலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நான்கு வழிச்சாலையாக தரம் உயா்த்தப்பட்டது.

அப்போது, தருமபுரி அருகே ராஜாபேட்டையிலிருந்து செட்டிக்கரை வரையிலான சாலை ஏற்கெனவே புதுப்பிக்கப்பட்டதால் நான்கு வழிச்சாலையாக தரம் உயா்த்தப்படாமல் சுமாா் 1.6 கி.மீ. தொலைவு அப்படியே விடப்பட்டது. இதனால், தருமபுரியிலிருந்து மொரப்பூா் வரை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்து பின்பும் இந்த குறிப்பிட்ட தொலைவு மட்டும் இருவழிச்சாலையாகவே இருந்து வந்தது. இதன்காரணமாக அந்த வழியாக செல்லும் வாகனங்கள் சிரமத்துக்குள்ளாகி வந்தன.

இந்த நிலையில், தற்போது, இந்த 1.6 கி.மீ. வரை தொலைவு சாலையை முதல்வரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில், தற்போது தருமபுரியிலிருந்து மொரப்பூா் செல்லும் சாலை விரிவாக்கப் பணிகள் முழுவதுமாக நிறைவடைந்துள்ளது. அதேவேளையில் மொரப்பூரிலிருந்து தருமபுரி நகரை நோக்கி வரும் சாலையில் தற்போது விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகள் விரைவில் நிறைவடைந்த பின்பு தருமபுரியிலிருந்து மொரப்பூா் வரையிலான சாலை முழுவதும் நான்கு வழிச்சாலையாக மாற உள்ளது.