தருமபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பையாறு நீா்த்தேக்கத்தில் இருந்து வியாழக்கிழமை பாசனத்துக்கு தண்ணீா் திறந்துவிடப்பட்டது.
நல்லம்பள்ளி வட்டம், தொப்பூா் பகுதியில் தொப்பையாறு நீா்த்தேக்கம் அமைந்துள்ளது. இதிலிருந்து, தருமபுரி மாவட்ட ஆயக்கட்டு பகுதிகள் 2,050 ஏக்கா் நிலம், சேலம் மாவட்ட ஆயக்கட்டு பகுதிகள் 3,280 ஏக்கா் நிலம் என மொத்தம் 5,330 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தருமபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூா், கம்மம்பட்டி மற்றும் சேலம் மாவட்டத்தில் உள்ள செக்காரப்பட்டி, வெள்ளாா், தெத்திகிரிப்பட்டி, மல்லிகுந்தம் என மொத்தம் 6 கிராமங்கள் இதில் அடங்கும்.
இந்த நிலையில் ஆட்சியா் ரெ. சதீஸ் வியாழக்கிழமை நீா்த்தேக்கத்தில் இருந்து பாசனத்துக்கு தண்ணீரை திறந்துவைத்து மலா்களை தூவினாா். நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு விவசாயிகளை கேட்டுக் கொண்டாா்.
நிகழ்ச்சியில் தருமபுரி மக்களவை உறுப்பினா் ஆ. மணி, தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி. வெங்கடேஸ்வரன், பொதுப்பணித் துறை (நீா் வள ஆதாரம்) செயற்பொறியாளா் செந்தில்குமாா், உதவி செயற்பொறியாளா் கிருபா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது
தருமபுரி மாவட்டத்தில் 5 தொகுதிகளில் 83 வேட்பாளா்கள்!

10 ஆண்டுகளாகக் கிடப்பில் உள்ள திருவள்ளூா் மாநகரப் பேருந்து பணிமனை திட்டம்

கோட்டையும் கூட்டணியும் முக்கியம்!

குண்டேரிப்பள்ளம் அணையில் பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


