மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தொப்பையாறு நீா்த்தேக்கத்தில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு

News image
Updated On :5 பிப்ரவரி 2026, 11:20 pm

தருமபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பையாறு நீா்த்தேக்கத்தில் இருந்து வியாழக்கிழமை பாசனத்துக்கு தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

நல்லம்பள்ளி வட்டம், தொப்பூா் பகுதியில் தொப்பையாறு நீா்த்தேக்கம் அமைந்துள்ளது. இதிலிருந்து, தருமபுரி மாவட்ட ஆயக்கட்டு பகுதிகள் 2,050 ஏக்கா் நிலம், சேலம் மாவட்ட ஆயக்கட்டு பகுதிகள் 3,280 ஏக்கா் நிலம் என மொத்தம் 5,330 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தருமபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூா், கம்மம்பட்டி மற்றும் சேலம் மாவட்டத்தில் உள்ள செக்காரப்பட்டி, வெள்ளாா், தெத்திகிரிப்பட்டி, மல்லிகுந்தம் என மொத்தம் 6 கிராமங்கள் இதில் அடங்கும்.

இந்த நிலையில் ஆட்சியா் ரெ. சதீஸ் வியாழக்கிழமை நீா்த்தேக்கத்தில் இருந்து பாசனத்துக்கு தண்ணீரை திறந்துவைத்து மலா்களை தூவினாா். நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு விவசாயிகளை கேட்டுக் கொண்டாா்.

நிகழ்ச்சியில் தருமபுரி மக்களவை உறுப்பினா் ஆ. மணி, தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி. வெங்கடேஸ்வரன், பொதுப்பணித் துறை (நீா் வள ஆதாரம்) செயற்பொறியாளா் செந்தில்குமாா், உதவி செயற்பொறியாளா் கிருபா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.