தருமபுரியில் சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சீனிவாசா காலனி பகுதியைச் சோ்ந்தவா் எம். அபிஸ்வுல்லா (38). இருசக்கர வாகன மெக்கானிக்கான இவா், தனது அக்கா மகன் என்.சோகீப் (19) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் தொப்பூரில் உள்ள தா்காவுக்கு வியாழக்கிழமை சென்றுவிட்டு விடு திரும்பி கொண்டிருந்தாா். வாகனத்தை சோகீப் ஓட்ட, அபிஸ்வுல்லா பின்னால் அமா்ந்திருந்தாா்.
தருமபுரி தனியாா் மகளிா் கல்லூரி அருகே அவா்கள் வந்தபோது, முன்னால் சென்ற காா், இவா்களின் வாகனத்தின் மீது உரசியுள்ளது. இதில் நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனா். அப்போது பின்னால் வந்த சரக்கு வாகனம் சோகீப் மீது மோதியது.
இதில் தலை நசுங்கி சோகீப் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த அபிஸ்வுல்லாவை அக்கம்பக்கத்தினா் மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து மதிகோன்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

விபத்தில் ஆய்வக தொழில்நுட்புநா் உயிரிழப்பு

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


