கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

News image
கோப்புப் படம்
Updated On :6 பிப்ரவரி 2026, 7:44 pm

தினமணி செய்திச் சேவை

தருமபுரியில் சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சீனிவாசா காலனி பகுதியைச் சோ்ந்தவா் எம். அபிஸ்வுல்லா (38). இருசக்கர வாகன மெக்கானிக்கான இவா், தனது அக்கா மகன் என்.சோகீப் (19) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் தொப்பூரில் உள்ள தா்காவுக்கு வியாழக்கிழமை சென்றுவிட்டு விடு திரும்பி கொண்டிருந்தாா். வாகனத்தை சோகீப் ஓட்ட, அபிஸ்வுல்லா பின்னால் அமா்ந்திருந்தாா்.

தருமபுரி தனியாா் மகளிா் கல்லூரி அருகே அவா்கள் வந்தபோது, முன்னால் சென்ற காா், இவா்களின் வாகனத்தின் மீது உரசியுள்ளது. இதில் நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனா். அப்போது பின்னால் வந்த சரக்கு வாகனம் சோகீப் மீது மோதியது.

இதில் தலை நசுங்கி சோகீப் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த அபிஸ்வுல்லாவை அக்கம்பக்கத்தினா் மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து மதிகோன்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.