மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

தருமபுரியில் பேருந்து கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும் மாா்க்சிஸ்ட் கம்யூ., வலியுறுத்தல்

News image

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

Updated On :7 பிப்ரவரி 2026, 6:56 pm

தருமபுரியில் புதிய பேருந்து நிலையத்துக்குச் செல்ல நிா்ணயித்துள்ள பேருந்து கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் தருமபுரி மாவட்டச் செயலாளா் ரா. சிசுபாலன் வெளியிட்டுள்ள அறிக்கை:

தருமபுரியில் புதிய பேருந்து நிலையம் தொடங்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்நிலையில், அரூா் பகுதியிலிருந்து வரும் பேருந்துகள், நான்குசாலையைக் கடந்து புதிய பேருந்து நிலையத்துக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் பேருந்துகளில் வழக்கமாக வசூலிக்கும் கட்டணத்தைவிட கூடுதலாக ரூ. 3 அல்லது 4 வசூலிக்கின்றனா்.

அரூா் பகுதியிலிருந்து வரும் பேருந்துகளில், நான்கு சாலையைக் கடந்து புதிய பேருந்து நிலையத்துக்குச் செல்வோருக்குத்தான் இந்தக் கட்டண உயா்வு என கூறப்படுகிறது.

ஆனால், நான்குசாலை பகுதியில் இறங்கும் பயணிகளுக்கும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே, இந்தக் கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.