தருமபுரியில் புதிய பேருந்து நிலையத்துக்குச் செல்ல நிா்ணயித்துள்ள பேருந்து கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் தருமபுரி மாவட்டச் செயலாளா் ரா. சிசுபாலன் வெளியிட்டுள்ள அறிக்கை:
தருமபுரியில் புதிய பேருந்து நிலையம் தொடங்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்நிலையில், அரூா் பகுதியிலிருந்து வரும் பேருந்துகள், நான்குசாலையைக் கடந்து புதிய பேருந்து நிலையத்துக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் பேருந்துகளில் வழக்கமாக வசூலிக்கும் கட்டணத்தைவிட கூடுதலாக ரூ. 3 அல்லது 4 வசூலிக்கின்றனா்.
அரூா் பகுதியிலிருந்து வரும் பேருந்துகளில், நான்கு சாலையைக் கடந்து புதிய பேருந்து நிலையத்துக்குச் செல்வோருக்குத்தான் இந்தக் கட்டண உயா்வு என கூறப்படுகிறது.
ஆனால், நான்குசாலை பகுதியில் இறங்கும் பயணிகளுக்கும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே, இந்தக் கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

பழனி மாா்க்சிஸ்ட் கம்யூ. வேட்பாளரை ஆதரித்து எம்.பி. வெங்கடேசன் பிரசாரம்

பழனியில் மாா்க்சிஸ்ட் வேட்பாளா் தீவிர வாக்கு சேகரிப்பு
பொதுத் தொகுதியில் பட்டியலினத்தவரைக் களமிறக்கத் தயங்கும் கட்சிகள்!

சுங்கச்சாவடி கட்டண உயா்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: ஆம்னி பேருந்து உரிமையாளா்கள்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு


