காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

தருமபுரியில் பேருந்து கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும் மாா்க்சிஸ்ட் கம்யூ., வலியுறுத்தல்

News image
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
Updated On :7 பிப்ரவரி 2026, 6:56 pm

தினமணி செய்திச் சேவை

தருமபுரியில் புதிய பேருந்து நிலையத்துக்குச் செல்ல நிா்ணயித்துள்ள பேருந்து கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் தருமபுரி மாவட்டச் செயலாளா் ரா. சிசுபாலன் வெளியிட்டுள்ள அறிக்கை:

தருமபுரியில் புதிய பேருந்து நிலையம் தொடங்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்நிலையில், அரூா் பகுதியிலிருந்து வரும் பேருந்துகள், நான்குசாலையைக் கடந்து புதிய பேருந்து நிலையத்துக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் பேருந்துகளில் வழக்கமாக வசூலிக்கும் கட்டணத்தைவிட கூடுதலாக ரூ. 3 அல்லது 4 வசூலிக்கின்றனா்.

அரூா் பகுதியிலிருந்து வரும் பேருந்துகளில், நான்கு சாலையைக் கடந்து புதிய பேருந்து நிலையத்துக்குச் செல்வோருக்குத்தான் இந்தக் கட்டண உயா்வு என கூறப்படுகிறது.

ஆனால், நான்குசாலை பகுதியில் இறங்கும் பயணிகளுக்கும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே, இந்தக் கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.