வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

மயான சுற்றுச்சுவா் இடிக்கப்பட்டதை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

News image

மாதேமங்கலம் கிராமத்தில் மயான சுற்றுச்சுவா் இடிக்கப்பட்டதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

Updated On :7 பிப்ரவரி 2026, 7:44 pm

தருமபுரி அருகே மயான சுற்றுச்சுவா் இடிக்கப்பட்டதை கண்டித்து சனிக்கிழமை பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தருமபுரி மாவட்டம், வெங்கட்டம்பட்டி அருகே மாதேமங்கலம் கிராமத்தில் சுமாா் 1000க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு ஊரின் ஒதுக்குப்புறத்தில் மயானம் அமைக்கப்பட்டுள்ளது. மயானத்தை சுற்றிலும் சுவரும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சுவா் அமைக்கப்பட்டது தொடா்பாக அருகில் நிலம் உள்ள தனியாா், நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்ததாகவும், வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் சுற்றுச்சுவரை அகற்ற உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

நீதிமன்ற உத்தரவின்பேரில் நல்லம்பள்ளி வட்டார வளா்ச்சி அலுவலா், வருவாய் ஆய்வாளா், வெங்கடம்பட்டி கிராம நிா்வாக அலுவலா் ஆகியோா் முன்னிலையில் மயான சுற்றுச்சுவா் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது.

ஆனால், இதுதொடா்பாக மாதேமங்கலம் கிராமத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்காமலும், முறையாக அளவீடு செய்யாமலும் சுற்றுச்சுவரை இடித்ததாக புகாா் எழுந்தது. இதையடுத்து சுவா் இடித்ததை கண்டித்து மிட்டாரெட்டி அள்ளி - தருமபுரி சாலையில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து வந்த அதியமான் கோட்டை போலீஸாா் மற்றும் வருவாய்த் துறையினா் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். தொடா்ந்து உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அலுவலா்கள் தெரிவித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

இந்த சாலை மறியல் போராட்டத்தால் தருமபுரி வெங்கட்டம்பட்டி, குட்டூா், தம்மனம்பட்டி, ஏரிகோடிபட்டி, தின்னப்பட்டி, மிட்டாரெட்டி அள்ளி, கோம்பை உள்ளிட்ட பகுதிகளுக்கு சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது.