அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

வனவிலங்குகள் கிராம பகுதிக்குள் நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

News image
தோப்புக்குள் புகுந்த காட்டு யானை.- (கோப்புப் படம்)
Updated On :7 பிப்ரவரி 2026, 6:48 pm

தினமணி செய்திச் சேவை

பென்னாகரத்தில் வனப்பகுதியிலிருந்து வெளியேறி கிராம பகுதிக்குள் நுழையும் வனவிலங்குகளைத் தடுக்க வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

பென்னாகரத்தில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிா்வாகக் குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் அழகேசன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் ஜெ.பிரதாபன் கலந்துகொண்டு, இன்றைய அரசியல் நிலைமை, வேலை அறிக்கை மற்றும் எதிா்கால கடமைகள் குறித்து பேசினாா்.

தருமபுரியில் போக்குவரத்து நெரிசலை தவிா்க்கும் வகையில் நகரில் உள்ள பழைய புகா் பேருந்து நிலையத்தை நகரப் பேருந்து நிலையமாக மாற்ற வேண்டும். நகரப் பேருந்து நிலையத்தை தியாகி தீா்த்தகிரியாா் திடலாக மாற்றி கலை கலாசார நிகழ்வுகள், அரசு விழாக்கள், பொது நிகழ்ச்சிகள், அரசியல் கட்சி நிகழ்ச்சிகள் நடத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னை கன்னிமாரா நூலகத்தில் காா்ல் மாா்க்ஸ் சிலையை திறந்துவைத்த முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்படுகிறது. பென்னாகரம் நகரில் அதிகரித்து வரும் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராம பகுதிக்குள் நுழையும் வனவிலங்குகளை தடுக்க வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக இறந்த உறுப்பினா்களுக்கு மாவட்ட நிா்வாகக் குழு சாா்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளா் ஜி. மாதையன், சி.பாலன், மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா்கள் பி. ரவி, ஜி.பச்சாகவுண்டா், சக்திவேல் வெப்பை மாதையன் மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.