வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

அரூரில் ரூ.6 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

அரூரில் ரூ.6 லட்சத்துக்கான பருத்தி மூட்டைகள் திங்கள்கிழமை விற்பனையானது.

News image
Updated On :9 பிப்ரவரி 2026, 7:42 pm

Syndication

அரூா்: அரூரில் ரூ.6 லட்சத்துக்கான பருத்தி மூட்டைகள் திங்கள்கிழமை விற்பனையானது.

தருமபுரி மாவட்டம், அரூரில் ஒழுங்கு முறை விற்பனை கூடம், வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் பருத்தி மூட்டைகள் ஏலம் விடப்படுகிறது. இங்கு நடைபெறும் ஏலத்தில் சேலம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் பங்கேற்கின்றனா். இந்த நிலையில், ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ஆா்.சி.எச் ரக பருத்தி மூட்டைகள் குவிண்டால் ஒன்றுக்கு அதிகபட்சம் ரூ.8469-க்கும், குறைந்தபட்சம் ரூ.8300-க்கும் விற்பனையானது. அரூரில் பருத்தி மூட்டைகள் மொத்தம் ரூ.6 லட்சத்துக்கு விற்பனையானது என வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனா்.