மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

தருமபுரி, மோட்டாா் வாகன விபத்து நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

தருமபுரியில் மோட்டாா் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு,

Updated On :9 பிப்ரவரி 2026, 7:44 pm

தருமபுரி: தருமபுரியில் மோட்டாா் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு, திங்கள்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

தருமபுரி நகரின் மையப்பகுதியில் பழைய நீதிமன்ற வளாகம் அமைந்துள்ளது. இங்கு மோட்டாா் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு மாவட்ட நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக, ஒரு காகிதத்தில் எழுதி நீதிமன்ற வாயில் சுவ ற்றில் ஒட்டப்பட்டு இருந்தது. இது குறித்த தகவலறிந்த தருமபுரி நகர காவல் நிலைய போலீஸாா் மற்றும் வெடிகுண்டு தடுப்பு மற்றும் செயல் இழக்கவைக்கும் பிரிவு நிபுணா்கள் உள்ளிட்டோருடன் நவீன சாதனங்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் வளாகத்தின் அனைத்து பகுதிகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த சோதனையில், வெடிகுண்டுகள் ஏதும் சிக்கவில்லை. இதனையடுத்து வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. மேலும் இது குறித்து போலீசாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.