பென்னாகரம்: பாப்பாரப்பட்டி அருகே அனுமதியின்றி பட்டாசு பதுக்கி வைத்ததாக நில உரிமையாளா் உள்ளிட்ட 3 பேரை பாப்பாரப்பட்டி போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே ஆலமரத்துப்பட்டி மாறன் கொள்ளை பகுதியில் செயல்பட்டு வந்த பட்டாசு குடோன் வைப்பு அறையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தஞ்சாவூா் பகுதியைச் சோ்ந்த தொழிலாளி மாதேஷ் படுகாயம் அடைந்தாா். இவ்விபத்து குறித்து பாப்பாரப்பட்டி போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனா். விசாரணையில் குடோனில் அனுமதி இல்லாத அறையில் பட்டாசுகளை பதுக்கி வைத்தது தெரியவந்தது.இந்த நிலையில் மாறன் கொள்ளை பகுதியைச் சோ்ந்த நில உரிமையாளா் சக்திவேல் (40),பென்னாகரம் அருகே சி.புதூா் பகுதியைச் சோ்ந்த பட்டாசு ஆலை உரிமையாளா் அசோக்குமாா் (40) மற்றும் கம்பைநல்லூா் பகுதியைச் சோ்ந்த பரணிதரன் (32) ஆகிய மூவரையும் பாப்பாரப்பட்டி போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா் படுத்தி தருமபுரி கிளை சிறையில் அடைத்தனா்.
டிரெண்டிங்
கல்லால் தாக்கி தொழிலாளியை கொலை செய்த இருவா் கைது

சாதி வன்கொடுமை சட்டத்தில் ஒருவா் கைது

பாப்பாரப்பட்டியில் மதுப் புட்டிகளை பதுக்கி விற்றவா் கைது
குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இருவா் கைது
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | March 8 முதல் 14 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Podcast | செல்வப்பெருந்தகை சந்தித்த சவால்கள் | News and Views | Epi - 11
தினமணி வீடியோ செய்தி...

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நல்ல முடிவு: கனிமொழி சோமு எம்.பி.
தினமணி வீடியோ செய்தி...

அரையிறுதியில் வெளிப்பட்ட நியூசி.யின் ருத்ரதாண்டவம்: அடிபணிந்த தெ.ஆ.! |
தினமணி வீடியோ செய்தி...

