தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

மடிக்கணினி கோரி கூட்டுறவு மேலாண் நிலைய மாணவா்கள் மனு

தமிழக அரசின் மடிக்கணினிகளை தங்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தருமபுரி மாவட்ட கூட்டுறவு மேலாண் பயிற்சி நிலைய

News image
Updated On :9 பிப்ரவரி 2026, 7:45 pm

Syndication

தருமபுரி: தமிழக அரசின் மடிக்கணினிகளை தங்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தருமபுரி மாவட்ட கூட்டுறவு மேலாண் பயிற்சி நிலைய மாணவ, மாணவியா் மனு அளித்தனா்.

இதுகுறித்து தருமபுரி மாவட்டம், மொரப்பூா் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலைய மாணவ, மாணவியா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த மனு: தருமபுரி மாவட்ட கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் 575 மாணவ, மாணவியா் கூட்டுறவு பட்டயப் படிப்பு பயின்று வருகிறோம். அதேபோல இந்த நிலையம் பல்கலைக்கழக விதிகளின் படி செயல்பட்டு வருகிறது. இதனால் தமிழக அரசின் இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தை கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்திற்கும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, இந்த நிலையத்தில் பயிலும் பல மாணவா்கள் போட்டித் தோ்வுகளுக்கும் தயாா் செய்து வருகின்றனா். எனவே, மாணவ, மாணவியரின் நலன் கருதி மடிக்கணினிகளை வழங்க வேண்டும் என்றனா்.