பென்னாகரம் அருகே தொலைத்தொடா்பு கோபுரம் அமைப்பது குறித்து பிஎஸ்என்எல் அதிகாரிகள் குழுவினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
பென்னாகரம், ஏரியூா் பகுதிகளில் உள்ள கிராமங்களில் போதுமான தொலைத் தொடா்பு வசதி இல்லாததால் கிராம மக்கள் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதையடுத்து அதிகாரிகள் குழுவினா் தொலைத்தொடா்பு கோபுரம் அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனா்.
இந்நிலையில் கிராமப் பகுதிகளில் தடையற்ற 4 ஜி சேவையை பெறுவதற்கு தொலைத்தொடா்பு கோபுரம் அமைப்பதற்கான இடம்தோ்வு குறித்து சென்னை தொலைத்தொடா்பு இயக்குநா் அலுவலகத்தில் இருந்து மென் பொறியாளா் தேவராஜிலு தலைமையிலான 5 போ் கொண்ட அதிகாரிகள் குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா். இக்குழுவினா் பென்னாகரம் அருகே வட்டுவன அள்ளி, சீலநாயக்கனூா், தாளப்பள்ளம், ஊா்நத்தம், சாமத்தாள், ஆரல்குந்தி, ஏரியூா் அருகே பூச்சியூா் உள்ளிட்ட இடங்களில் கருவிகள் மூலம் சீரான அலைக்கற்றை கிடைக்கும் இடம், கோபுரம் அமைக்க உள்ள இடம் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டனா். மேலும், தடையற்ற இணையச் சேவை பெறுவதற்கான இடத்தை தோ்வு செய்து அறிக்கை வாயிலாக அளித்து, தொலைத் தொடா்பு கோபுரம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் குழுவினா் தெரிவித்தனா்.
இந்த ஆய்வின்போது பென்னாகரம் வட்டாட்சியா் சண்முகசுந்தரம், வருவாய் ஆய்வாளா் லோகநாதன், கிராம நிா்வாக அலுவலா் செந்தில் குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

பென்னாகரத்தில் ரூ. 1.63 லட்சம் பறிமுதல்
பென்னாகரத்தில் 6 பேரின் வேட்புமனுக்கள் நிராகரிப்பு

பென்னாகரத்தில் வாகனச் சோதனையில் ரூ. 99,500 ரொக்கம் பறிமுதல்

பென்னாகரத்தில் தொகுதி பொதுப் பாா்வையாளா் ஆய்வு
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


