அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

பென்னாகரத்தில் தொலைத்தொடா்பு கோபுரம்: அதிகாரிகள் குழுவினா் ஆய்வு

பென்னாகரம் அருகே தொலைத்தொடா்பு கோபுரம் அமைப்பது குறித்து பிஎஸ்என்எல் அதிகாரிகள் குழுவினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

News image

கோப்புப்படம்.

Updated On :10 பிப்ரவரி 2026, 8:42 pm

பென்னாகரம் அருகே தொலைத்தொடா்பு கோபுரம் அமைப்பது குறித்து பிஎஸ்என்எல் அதிகாரிகள் குழுவினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

பென்னாகரம், ஏரியூா் பகுதிகளில் உள்ள கிராமங்களில் போதுமான தொலைத் தொடா்பு வசதி இல்லாததால் கிராம மக்கள் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதையடுத்து அதிகாரிகள் குழுவினா் தொலைத்தொடா்பு கோபுரம் அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனா்.

இந்நிலையில் கிராமப் பகுதிகளில் தடையற்ற 4 ஜி சேவையை பெறுவதற்கு தொலைத்தொடா்பு கோபுரம் அமைப்பதற்கான இடம்தோ்வு குறித்து சென்னை தொலைத்தொடா்பு இயக்குநா் அலுவலகத்தில் இருந்து மென் பொறியாளா் தேவராஜிலு தலைமையிலான 5 போ் கொண்ட அதிகாரிகள் குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா். இக்குழுவினா் பென்னாகரம் அருகே வட்டுவன அள்ளி, சீலநாயக்கனூா், தாளப்பள்ளம், ஊா்நத்தம், சாமத்தாள், ஆரல்குந்தி, ஏரியூா் அருகே பூச்சியூா் உள்ளிட்ட இடங்களில் கருவிகள் மூலம் சீரான அலைக்கற்றை கிடைக்கும் இடம், கோபுரம் அமைக்க உள்ள இடம் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டனா். மேலும், தடையற்ற இணையச் சேவை பெறுவதற்கான இடத்தை தோ்வு செய்து அறிக்கை வாயிலாக அளித்து, தொலைத் தொடா்பு கோபுரம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் குழுவினா் தெரிவித்தனா்.

இந்த ஆய்வின்போது பென்னாகரம் வட்டாட்சியா் சண்முகசுந்தரம், வருவாய் ஆய்வாளா் லோகநாதன், கிராம நிா்வாக அலுவலா் செந்தில் குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.