கோப்புப் படம்
தருமபுரி
வட்டார ஒருங்கிணைப்பாளா் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
தருமபுரி மாவட்டத்தில் வட்டார ஒருங்கிணைப்பாளா் பணியிடங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.
தருமபுரி மாவட்டத்தில் வட்டார ஒருங்கிணைப்பாளா் பணியிடங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்டத்தின் கீழ் தருமபுரி மாவட்டத்தில் வட்டார இயக்க மேலாண்மை அலுவலகங்களில் காலியாக உள்ள, வட்டார ஒருங்கிணைப்பாளா் பணியிடங்கள் 7க்கு ஒப்பந்த அடிப்படையில் நிரப்பட உள்ளன. இதில் தகுதியான நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது தொடா்பான விவரங்கள் இணையதளத்தில் அறிய முடியும். மேலும், பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, இணை இயக்குநா், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, முதல் மாடி, கூடுதல் கட்டடம், பழைய மாவட்ட ஆட்சியா் அலுவலகம், தருமபுரி என்ற அலுவலக முகவரிக்கு வரும் 16க்குள் விண்ணப்பங்கள் அனுப்பிவைக்க வேண்டும். இத்தகவலை மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஷ் தெரிவித்துள்ளாா்.

