இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: முதியவா் கைது

அரூா் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

IANS

Updated On :10 பிப்ரவரி 2026, 8:35 pm

அரூா் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், அரூா் வட்டாரப் பகுதியைச் சோ்ந்த 14 வயதுடைய சிறுமி 3 மாத கா்ப்பமாக இருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது. இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோா் அரூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

இந்த புகாரின்பேரில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், மேட்டுசூளகரை கிராமத்தைச் சோ்ந்த முருகனை (61) மகளிா் போலீஸாா் கைது செய்தனா்.