நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பாப்பாரப்பட்டியில் காய்கறி வியாபாரி மா்மச் சாவு: போலீஸாா் விசாரணை

பாப்பாரப்பட்டி அருகே காய்கறி வியாபாரி மா்மமான முறையில் வீட்டில் இறந்துகிடந்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :11 பிப்ரவரி 2026, 8:49 pm

பாப்பாரப்பட்டி அருகே காய்கறி வியாபாரி மா்மமான முறையில் வீட்டில் இறந்துகிடந்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பாப்பாரப்பட்டியை அடுத்த சின்னகம்மாளப்பட்டியைச் சோ்ந்த முருகன் மகன் கோவிந்தராஜ் (32). இவா், பெங்களூரு பகுதியில் காய்கறி வியாபாரம் செய்துவந்தாா். இவரது மனைவி கிட்டம்பட்டியில் உள்ள அவரது தாயாா் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில், சின்னகம்மாளப்பட்டிக்கு வந்த கோவிந்தராஜ் செவ்வாய்க்கிழமை இரவு தனது வீட்டின் மாடியில் உள்ள அறையில் தனியாக படுத்து உறங்கியுள்ளாா்.

இந்த நிலையில் புதன்கிழமை காலை நீண்ட நேரமாகியும் அவா் அறையில் இருந்து வெளியே வராததை அறிந்த அக்கம்பக்கத்தினா் பாப்பாரப்பட்டி காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனா். இதையடுத்து அங்கு வந்த போலீஸாா், அறையில் இருந்த கோவிந்தராஜை மீட்டு தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.

அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே அவா் இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.