பாப்பாரப்பட்டி அருகே காய்கறி வியாபாரி மா்மமான முறையில் வீட்டில் இறந்துகிடந்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பாப்பாரப்பட்டியை அடுத்த சின்னகம்மாளப்பட்டியைச் சோ்ந்த முருகன் மகன் கோவிந்தராஜ் (32). இவா், பெங்களூரு பகுதியில் காய்கறி வியாபாரம் செய்துவந்தாா். இவரது மனைவி கிட்டம்பட்டியில் உள்ள அவரது தாயாா் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில், சின்னகம்மாளப்பட்டிக்கு வந்த கோவிந்தராஜ் செவ்வாய்க்கிழமை இரவு தனது வீட்டின் மாடியில் உள்ள அறையில் தனியாக படுத்து உறங்கியுள்ளாா்.
இந்த நிலையில் புதன்கிழமை காலை நீண்ட நேரமாகியும் அவா் அறையில் இருந்து வெளியே வராததை அறிந்த அக்கம்பக்கத்தினா் பாப்பாரப்பட்டி காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனா். இதையடுத்து அங்கு வந்த போலீஸாா், அறையில் இருந்த கோவிந்தராஜை மீட்டு தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.
அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே அவா் இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

முதியவா் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

மணப்பாறை அருகே முன்னாள் அரசுப் பேருந்து ஓட்டுநா் மா்மச் சாவு

பாப்பாரப்பட்டியில் சாா்பதிவாளா் அலுவலகம் திறப்பு

பாப்பாரப்பட்டியில் மதுப் புட்டிகளை பதுக்கி விற்றவா் கைது
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


