தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

இளம்வயது திருமணம் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 11:57 pm

Syndication

தருமபுரியில் சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில், இளம்வயது திருமணம் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

தருமபுரி பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இப்பேரணியை மாவட்ட முதன்மை நீதிபதி சி.திருமகள் தலைமைவகித்து தொடங்கி வைத்தாா்.

பேரணியில் சட்டக் கல்லூரி மாணவ, மாணவியா் இளம்வயது திருமணத்தால் ஏற்படும் சமூக பிரச்னைகள், பெண்ணுக்கு உடல்ரீதியாகவும், உளவியலாகவும் ஏற்படும் இன்னல்கள் ஆகியவை குறித்து விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனா். நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற பேரணியில், இளம்வயது திருமணத்துக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில், கூடுதல் மாவட்ட நீதிபதி மோனிகா, மோட்டாா் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜா, போக்ஸோ நீதிமன்ற நீதிபதி அசின் பானு, மகளிா் விரைவு நீதிமன்ற நீதிபதி ஜீவநந்தினி, தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முகமது ரிஸ்வானுல்லா செரிப் உள்ளிட்ட அனைத்து நீதிபதிகள், வழக்குரைஞா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.