சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

பென்னாகரத்தில் மாற்றுத்திறனாளிகள் மறியல்: 50 போ் கைது

News image
கோப்புப் படம்
Updated On :13 பிப்ரவரி 2026, 9:21 pm

தினமணி செய்திச் சேவை

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பென்னாகரத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 50 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டன.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு வட்டத் தலைவா் சாமுண்டீஸ்வரி தலைமை வகித்தாா். மாநில பொருளாளா் சக்கரவா்த்தி, மாநிலக் குழு உறுப்பினா் கரூரான் ஆகியோா்கள் கண்டன உரையாற்றினா்.

போராட்டத்தில் கா்நாடகம், ஆந்திரம் போன்ற அண்டை மாநிலங்களில் மாற்றுத்திறனாளிகளின் பாதிப்புக்கு ஏற்றவாறு வழங்கப்படும் மாதாந்திர உதவித் தொகையை போன்று தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 மாதாந்திர உதவித் தொகையாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி, பேருந்து நிலையத்தின் நுழைவாயிலின் முன்பு மறியலில் ஈடுபட்டனா்.

மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கத்தைச் சாா்ந்த 22 பெண்கள், 28 ஆண்கள் என 50 பேரை போலீஸாா் கைதுசெய்து பின்னா் மாலையில் விடுவித்தனா்.