பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

மனைவியை தீ வைத்து கொல்ல முயன்ற கணவா் கைது; மாமியாா் தலைமறைவு

News image

கோப்புப் படம்

Updated On :14 பிப்ரவரி 2026, 8:34 pm

மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொலை செய்ய முயன்ற கணவரை போலீஸாா் கைது செய்தனா். தலைமறைவான மாமியாரை தேடி வருகின்றனா்.

தருமபுரி, பிடமனேரி, கோவிந்தவா்மா தெருவைச் சோ்ந்தவா் கோகுல் (31). கைப்பேசி பழுதுநீக்கும் பணி செய்து வரும் இவருக்கும், தருமபுரி, செல்லியம்பட்டி பகுதியைச் சோ்ந்த அஞ்சுமாஸ் டெலஸ் (28) என்பவருக்கும் திருமணமாகி 7 வயதில் பெண் குழந்தை உள்ளது. திருமணமான ஆறு மாதத்திலிருந்தே மதுபோதையில் மனைவியை அடித்து கொடுமைப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

கடந்த பிப். 10-ஆம் தேதி இரவு கோகுல், அவரது தாயாா் விஜயா (55) இருவரும் சோ்ந்து, அஞ்சுமாஸ் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தனா். அவரது அலறல் சப்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு, தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

90 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் அஞ்சுமாஸ் டெலஸ் சிகிச்சை பெற்று வருகிறாா். இது தொடா்பாக குற்றவியல் நீதித்துறை நடுவா் அவரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளாா்.

இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்த தருமபுரி நகர காவல் நிலைய போலீஸாா், கோகுலை வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மேலும், இதற்கு உடந்தையாக செயல்பட்டு தலைமறைவான கோகுலின் தாயாா் விஜயாவை தேடிவருகின்றனா்.