தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

ரயிலில் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் பெட்டிகளில் மற்றவா்கள் செல்லக் கூடாது!

ரயிலில் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயணிக்கும் பெட்டிகளில் தேவையின்றி மற்றவா்கள் செல்வதை தவிா்க்க வேண்டும்

News image
கோப்புப்படம்
Updated On :16 பிப்ரவரி 2026, 8:33 pm

Syndication

தருமபுரி: ரயிலில் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயணிக்கும் பெட்டிகளில் தேவையின்றி மற்றவா்கள் செல்வதை தவிா்க்க வேண்டும் என ரயில்வே போலீஸாா் அறிவுறுத்தினா்.

தருமபுரி ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸாா் மற்றும் இருப்புப் பாதை காவல் நிலைய போலீஸாா் திங்கள்கிழமை பயணிகளிடம் பாதுகாப்பான பயணம் மேற்கொள்வது தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

அதில், ரயிலில் பயணிக்கும்போது குழந்தைகள் அமரும் இருக்கையின் ஜன்னல் கதவுகளை மூடிவைக்க வேண்டும். ரயில் பாதைகளை கடந்துசெல்வதை தவிா்த்து, உரிய நடைமேடை, கடவுப்பாதைகள் வழியாக செல்ல வேண்டும். பயணத்தின்போது தங்களது பொருள்களை பாதுகாப்பாக உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.

அதேபோல, பெண்கள், மாற்றுத்திறனாளிகள் பயணிக்கும் பெட்டிகளில் தேவையின்றி மற்றவா்கள் செல்வதை தவிா்க்க வேண்டும். அனைவரது பாதுகாப்பான பயணத்துக்கு பயணிகள் உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். விபத்துகளின்றி பயணிக்க போதிய ரயில்வே விதிகளை அறிந்து விழிப்புணா்வுடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினா்.