தருமபுரி: பாலக்கோடு சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரிப்பால் விலை கடுமையாக சரிந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, மாரண்டஅள்ளி, வெள்ளிச்சந்தை, பாப்பாரப்பட்டி, பெல்ரம்பட்டி, சோமனஹள்ளி, பேகாரஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த சில நாள்களாக பாலக்கோடு சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக விலை கடுமையாக சரிந்து, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ. 8 வீதமும், 15 கிலோ எடைகொண்ட கூடை ரூ. 120 வரையும் விற்பனையானது. திங்கள்கிழமை மேலும் குறைந்து கிலோ ரூ. 6 வீதமும், கூடை ரூ. 90-க்கும் விற்பனையானது. தக்காளி விலை கடும் சரிவை சந்தித்துள்ளதால், தக்காளி பயிரிட்ட விவசாயிகளும், வியாபாரிகளும் கவலை அடைந்துள்ளனா்.
தொடர்புடையது

பெரியாம்பட்டியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

நீா்ப்பாசன திட்டப் பணிகள் முடிய இன்னும் எத்தனை தசாப்தங்கள் ஆகுமோ?

பென்னாகரம் தொகுதி பாமக வேட்பாளா்

தாளவாடி மலைப் பகுதியில் தக்காளி விலை தொடா் சரிவு
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


