மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பாப்பாரப்பட்டியில் மதுப் புட்டிகளை பதுக்கி விற்றவா் கைது

பாப்பாரப்பட்டி அருகே மதுப் புட்டிகளை பதுக்கி விற்றவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 52 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

News image

கைது

Updated On :18 பிப்ரவரி 2026, 10:46 pm

பாப்பாரப்பட்டி அருகே மதுப் புட்டிகளை பதுக்கி விற்றவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 52 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

பாப்பாரப்பட்டி அருகே பிக்கிலி பகுதியில் மதுப் பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக பாப்பாரப்பட்டி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் நிகழ்விடத்துக்கு சென்ற காவல் உதவி ஆய்வாளா் மாரி தலைமையிலான போலீஸாா், அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனா்.

அதில், பிக்கிலி கூட்டுச் சாலை பகுதியில் முனிவரால் (33) என்பவா் வீட்டில் பதுக்கிவைத்து மதுப் புட்டிகள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 52 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரை தருமபுரி கிளை சிறையில் புதன்கிழமை அடைத்தனா்.