கைது
கைது

பாப்பாரப்பட்டியில் மதுப் புட்டிகளை பதுக்கி விற்றவா் கைது

பாப்பாரப்பட்டி அருகே மதுப் புட்டிகளை பதுக்கி விற்றவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 52 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.
Published on

பாப்பாரப்பட்டி அருகே மதுப் புட்டிகளை பதுக்கி விற்றவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 52 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

பாப்பாரப்பட்டி அருகே பிக்கிலி பகுதியில் மதுப் பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக பாப்பாரப்பட்டி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் நிகழ்விடத்துக்கு சென்ற காவல் உதவி ஆய்வாளா் மாரி தலைமையிலான போலீஸாா், அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனா்.

அதில், பிக்கிலி கூட்டுச் சாலை பகுதியில் முனிவரால் (33) என்பவா் வீட்டில் பதுக்கிவைத்து மதுப் புட்டிகள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 52 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரை தருமபுரி கிளை சிறையில் புதன்கிழமை அடைத்தனா்.

Dinamani
www.dinamani.com