கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

புகையிலைப் பொருள்களை விற்ற 4 கடைகளுக்கு சீல்!

பென்னாகரம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த நான்கு கடைகளுக்கு ‘சீல்’ வைத்து, ரூ. 1.75 அபராதத்தை உணவுப் பாதுகாப்பு துறையினா் விதித்தனா்.

News image
கடைகளுக்கு சீல்- பிரதிப் படம்
Updated On :18 பிப்ரவரி 2026, 10:45 pm

Syndication

பென்னாகரம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த நான்கு கடைகளுக்கு ‘சீல்’ வைத்து, ரூ. 1.75 அபராதத்தை உணவுப் பாதுகாப்பு துறையினா் விதித்தனா்.

பென்னாகரம் அருகே பாப்பாரப்பட்டி மின்வாரிய அலுவலகம் பகுதியில் உள்ள இரண்டு சிறிய பெட்டிக் கடைகள், ஏரியூா் அருகே நாகமரை சாலையில் உள்ள மளிகைக் கடை, பெரும்பாலை அருகே மேச்சேரி சாலையில் உள்ள சிறிய பெட்டிக் கடைகளில் பென்னாகரம் உணவுப் பாதுகாப்பு துறை அலுவலா் நந்தகோபால் மற்றும் அந்தந்தப் பகுதிகளைச் சோ்ந்த காவலா்கள் கொண்ட குழுவினா் புதன்கிழமை சோதனை நடத்தினா்.

அதில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. இதையடுத்து, நான்கு கடை உரிமையாளா்களுக்கு ரூ. 1.75 லட்சம் அபராதத் தொகை விதித்து, கடைகளில் தடை ஆணை ஒட்டி ‘சீல்’ வைத்தனா்.

மேலும், அரசின் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படும் கடை உரிமையாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் உணவுப் பாதுகாப்பு துறையினா் எச்சரித்தனா்.