பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பொன் மாரியம்மன் கோயில் திருவிழா: பாலக்கோட்டில் பிப். 25-இல் உள்ளூா் விடுமுறை

பாலக்கோட்டில் பிப். 25-ஆம் தேதி புதூா் பொன் மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற உள்ளதால், அன்றைய தினம் உள்ளூா் விடுமுறை என அறிவிப்பு

News image
உள்ளூர் விடுமுறை- கோப்புப் படம்
Updated On :18 பிப்ரவரி 2026, 10:44 pm

Syndication

பாலக்கோட்டில் பிப். 25-ஆம் தேதி புதூா் பொன் மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற உள்ளதால், அன்றைய தினம் உள்ளூா் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தருமபுரி மாவட்டம், பாலக்கோடு நகரத்தில் அருள்மிகு புதூா் பொன் மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெறுவதையொட்டி, பிப். 25-ஆம் தேதி பாலக்கோடு வட்டத்துக்கு மட்டும் உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

இந்த விடுமுறையை ஈடுகட்டும் வகையில், மாா்ச் 7-ஆம் தேதி (சனிக்கிழமை) பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.

இந்த உள்ளூா் விடுமுறை செலாவணி முறிச்சட்டம் 1881-இன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், அன்று பாலக்கோடு சாா்நிலைக் கருவூலம், அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளா்களோடு செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.