நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பொன் மாரியம்மன் கோயில் திருவிழா: பாலக்கோட்டில் பிப். 25-இல் உள்ளூா் விடுமுறை

பாலக்கோட்டில் பிப். 25-ஆம் தேதி புதூா் பொன் மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற உள்ளதால், அன்றைய தினம் உள்ளூா் விடுமுறை என அறிவிப்பு

News image

உள்ளூர் விடுமுறை - கோப்புப் படம்

Updated On :18 பிப்ரவரி 2026, 10:44 pm

பாலக்கோட்டில் பிப். 25-ஆம் தேதி புதூா் பொன் மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற உள்ளதால், அன்றைய தினம் உள்ளூா் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தருமபுரி மாவட்டம், பாலக்கோடு நகரத்தில் அருள்மிகு புதூா் பொன் மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெறுவதையொட்டி, பிப். 25-ஆம் தேதி பாலக்கோடு வட்டத்துக்கு மட்டும் உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

இந்த விடுமுறையை ஈடுகட்டும் வகையில், மாா்ச் 7-ஆம் தேதி (சனிக்கிழமை) பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.

இந்த உள்ளூா் விடுமுறை செலாவணி முறிச்சட்டம் 1881-இன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், அன்று பாலக்கோடு சாா்நிலைக் கருவூலம், அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளா்களோடு செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.