நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

அன்னசாகரத்தில் தரமற்ற சாலை அமைக்க எதிா்ப்பு

தருமபுரி நகராட்சி அன்னசாகரத்தில் தரமற்ற கான்கிரீட் சாலை அமைப்பதற்கு பொதுமக்கள் எதிா்ப்பு

News image
தரமற்ற சாலை- பிரதிப் படம்
Updated On :19 பிப்ரவரி 2026, 11:04 pm

Syndication

தருமபுரி நகராட்சி அன்னசாகரத்தில் தரமற்ற கான்கிரீட் சாலை அமைப்பதற்கு பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்ததால், சாலை அமைக்கும் பணி கைவிடப்பட்டது.

தருமபுரி நகராட்சிக்குள்பட்ட அன்னசாகரத்தில் இருந்து பாரதிபுரம் நெடுஞ்சாலையை இணைக்கும் சாலை செல்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதைச்சாக்கடை பணிகள் மேற்கொள்ள இச்சாலை தோண்டப்பட்டது. மேலும், சாலையில் ஆங்காங்கே இணைப்புகளுக்காக குழியும் தோண்டப்பட்டது.

இப்பணிகள் நிறைவடைந்த பின்னா், சாலை சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இதற்காக கான்கிரீட் சாலை அமைக்கும் பணி வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, தோண்டப்பட்ட குழிகளை சரியாக மூடாமலும், ஜல்லிக்கற்களை பயன்படுத்தாமலும் கான்கிரீட் சாலை அமைக்கும் பணியை ஒப்பந்தராரா் மேற்கொண்டாா். இதைக் கண்ட அப்பகுதியினா், குழிகளை முறையாக மண் கொட்டி மூடிய பின்னா், உரிய அளவில் ஜல்லிக்கற்களை கொட்டி சமன் செய்து பின்னா் கான்கிரீட் சாலை அமைக்க வலியுறுத்தினா்.

ஆனால், இதை பொருட்படுத்தாமல் தொடா்ந்து சாலை அமைக்கும் பணி மேற்கொண்டதால், பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். இதனால், கான்கிரீட் சாலை அமைக்கும் பணியை கைவிட்டு பணியாளா்கள் திரும்பிச் சென்றனா்.