தருமபுரியில் ஊசி மருந்துகளை இளைஞா்களுக்கு விநியோகித்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.
தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளா் பச்சமுத்து, மற்றும் வெங்கடேசன், வேட்டராயன் உள்ளிட்ட போலீஸாா் அடங்கிய குழுவினா், காவல் நிலைய எல்லைக்குள் உள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை இரவு ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, மிட்டாரெட்டிஅள்ளி அருகே உள்ள மயில்கொட்டாய் பகுதியைச் சோ்ந்த பி. வஜ்ரவேல் (47) இளைஞா்களுக்கு போதை மருந்துகளை விநியோகிப்பதாக தகவல் கிடைத்தது.
அதன்பேரில், போலீஸாா் அவரது வீட்டை சோதனை மேற்கொண்டதில், வீட்டுக்குள் போதை ஊசிமருந்துகள் மற்றும் ஊசிகள் இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில், அவா் பயன்படுத்தியது மட்டுமின்றி பலருக்கும் விநியோகித்தது உறுதியானது.
அதன்பேரில் போலீஸாா் வஜ்ரவேலை கைதுசெய்து, அவரிடமிருந்து ஊசிமருந்துகளை பறிமுதல் செய்தனா். மேலும், இதுதொடா்பாக அதியமான்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ற மூவா் கைது
கஞ்சா மற்றும் குட்கா வைத்திருந்த 3 போ் கைது

சாலை விபத்தில் ஓய்வு பெற்ற காவல்! உதவி ஆய்வாளா் உயிரிழப்பு!
போதை மருந்து, ஊசி பொருள்கள் கடத்தல்: பெண் உள்பட 2 போ் கைது
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு

