தருமபுரி அருகே, அரசால் தடைசெய்யப்பட்ட ரூ. 5 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களுடன் 2 காா்களை போலீஸாா் மீட்டனா். இதுதொடா்பாக இருவரை கைது செய்துள்ளனா்.
தருமபுரி மாவட்டம் தொப்பூா் காவல் நிலைய ஆய்வாளா் பிரபாகரன் தலைமையிலான போலீஸாா், சேலம்- தருமபுரி பிரதான சாலையில் கட்டமேடு பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அந்த வழியாக வந்த இரு காா்களை நிறுத்தி சோதனை செய்ததில், அவற்றில், அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்திச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து இரு காா்களுடன் புகையிலை பொருள்களையும் பறிமுதல் செய்தனா்.
அவற்றை வடமாநிலங்களிலிருந்து முறைகேடாக கடத்தி வந்துள்ளனா். புகையிலைப்பொருள்களின் மதிப்பு ரூ. 4, 43, 480 ஆகும். இதனையடுத்து காா்களை ஓட்டி வந்த ஓட்டுநா்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த ஹரிஷ் குமாா் (25), தேவாராம் (22) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.
டிரெண்டிங்

53 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: வியாபாரி கைது
புகையிலைப் பொருள்கள் விற்ற இருவா் கைது

தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள் விற்பனை: பெட்டிக் கடைக்காரா் கைது

காரில் பதுக்கிவைத்து விற்பனை செய்த 69 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
வீடியோக்கள்

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

Podcast | திருச்சியில் மாநாடுகள்: யாருக்குத் திருப்பம்? | Dinamani | News and Views | Epi - 12
தினமணி வீடியோ செய்தி...

