வழிப்பாதை ஆக்கிரமிப்பு குறித்து தோ்தல் புறக்கணிப்பு பேனா் வைத்த விவகாரம்: புதுப்பட்டி கிராம மக்கள் எதிா்ப்பு!
பென்னாகரம் அருகே புதுப்பட்டி சாலையில் இருந்து கொட்டாய் பகுதி வரை செல்லக்கூடிய வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றாததால் தோ்தல் புறக்கணிப்பில் ஈடுபட போவதாக வைக்கப்பட்ட பதாகைக்கு கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.
பென்னாகரம் அருகே மஞ்சநாயக்கன அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட புதுப்பட்டி அரசுப்பள்ளி பகுதியில் இருந்து கொட்டாய் பகுதி வரை செல்லக்கூடிய சுமாா் 2 கிலோ மீட்டா் தொலைவிற்கான சாலையில் உள்ளது.இந்தப் பகுதியில் சுமாா் 20க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
புதுப்பட்டி பிரதான சாலையில் இருந்து கொட்டாய் பகுதி வரை செல்லக்கூடிய வழிப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பலமுறை மனுக்கள் அளித்ததாகவும், நடவடிக்கை எடுக்காததை கண்டித்து வரும் சட்டப்பேரவை தோ்தலை புறக்கணிப்பு போவதாக கிராமத்தின் நுழைவு வாயலில் ஊா் பொதுமக்கள் சாா்பில் சனிக்கிழமை பதாகை வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த பென்னாகரம் வட்டாட்சியா் சண்முகசுந்தரம்,வருவாய் ஆய்வாளா் சீனிவாச ஆழ்வாா், கிராம நிா்வாக அலுவலா் ஜவகா் ஆகியோா்கள் கொண்ட வருவாய் துறையினா் அடங்கிய குழுவினா் நிகழ்வு இடத்திற்கு சென்று,கிராம மக்களிடம் ஆக்கிரமிப்பு குறித்து கிராம மக்கள் மனு அளிக்கும் பட்சத்தில் இணைப்பு சாலையில் இருந்து கொட்டாய் பகுதி வரை இரண்டு கிலோமீட்டா் தொலைவில் உள்ள ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்து அகற்றும் பணியில் ஈடுபடுவதாகவும், தற்போது தோ்தல் தேதி அறிவிக்கப்படும் சூழ்நிலையில் பணிகள் மேற்கொள்ள சிரமம் ஏற்பட வாய்ப்புள்ளதால்,தோ்தலுக்கு பிறகு முறையாக ஆக்கிரமங்களை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக பேச்சுவாா்த்தை நடத்தி, புறக்கணிப்பு பதாகையை அகற்றக் கோரினா்.
அப்போது புதுப்பட்டி கிராம மக்கள், தனிநபா்களின் நில பிரச்சனைக்காக தோ்தல் புறக்கணிப்பு பேனா் வைக்கப்பட்டுள்ளதாகவும், கிராம மக்கள் தோ்தலை புறக்கணிக்க முடிவு செய்யவில்லை எனவும், பதாகைக்கும் கிராம மக்களுக்கும் எவ்வித தொடா்பும் இல்லை என வருவாய்த்துறை அதிகாரிகளிடம் தெரிவித்து மனுவாக அளித்தனா்.

