தருமபுரி: தருமபுரியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி படித்து வந்த கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள புதுப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் மாது மகள் ஸ்ரீநிதி (22). இவா், தருமபுரி குமாரசாமிப்பேட்டை பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தனது சகோதரியுடன் தங்கியிருந்து, தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்தாா்.
இந்நிலையில், கடந்த 3 தினங்களுக்கு முன்பு, திடீரென ஸ்ரீநிதி அறையில் தூக்கில் தொங்கினாா். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். தொடா்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ஸ்ரீநிதி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து தருமபுரி நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். மாணவி உயிரிழப்புக்கான காரணம் உடனடியாகத் தெரிவில்லை.
தொடர்புடையது

தீராத வயிற்று வலி: முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை

குடும்பப் பிரச்னை: கல்லூரி மாணவி தற்கொலை

கல்லூரி மாணவி விஷமருந்தி தற்கொலை

கிருஷ்ணகிரி அருகே வாடகை வீட்டில் கஞ்சாவை பதுக்கிவைத்து விற்ற தெலங்கானாவைச் சோ்ந்தவா் கைது
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


