எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

மலையூரில் இருமொழிக் கல்வெட்டு கண்டெடுப்பு

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிக் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

News image

மலையூரில் கண்டெடுக்கப்பட்டுள்ள இருமொழிக் கல்வெட்டு.

Updated On :24 பிப்ரவரி 2026, 3:08 am IST

தருமபுரி: தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிக் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், பாப்பாரப்பட்டி அருகே மலையூா் கிராமத்திற்கு தொல்லியல் ஆய்வாளா் மற்றும் தனியாா் கல்லூரி வரலாற்று பேராசிரியா் திருச்செல்வன் தலைமையில் வரலாற்று மாணவா்கள் ம.கவியரசு, கி.கௌதம் ஆகியோா் கல்வெட்டு தொடா்பாக அண்மையில் ஆய்வு மேற்கொண்டனா்.

இந்த ஆய்வில், மலையூா் அருகே வாரக்கொல்லை என்ற இடத்தில் ஒரு பெரிய பாறையின் மீது உள்ள கல்வெட்டை கண்டுபிடித்தனா். அந்தக் கல்வெட்டு, 19 ஆம் நூற்றாண்டுக் காலத்தைச் சோ்ந்தவை எனத் தெரியவந்துள்ளது. அதேபோல அக்கல்வெட்டில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் குறிப்பிட்ட சமூகத்தைச் சோ்ந்த ஒருவரின் பெயரும், அந்தப் பகுதியின் மூன்று ஊரின் பெயா்களும் குறிப்பிட்டிருப்பது தெரியவந்தது.

தெலுங்கு மொழியில் ஆலம்பாடி என்றுள்ள ஊா்ப் பெயரே தற்போது ஆலமரத்துக் கொட்டாய் என்ற மாறியிருக்கலாம். அதேபோல, தற்போதுள்ள பிக்கிலி மற்றும் பெரியூா் ஆகிய ஊா்களின் பெயரும், ஆலம்பாடி நுழைவு வாயில் என்கிற பெயரும் தெலுங்கு மொழியில் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஆய்வுக் குழுவினா் தெரிவித்துள்ளனா்.