மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

மலையூரில் இருமொழிக் கல்வெட்டு கண்டெடுப்பு

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிக் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

News image
மலையூரில் கண்டெடுக்கப்பட்டுள்ள இருமொழிக் கல்வெட்டு.
Updated On :23 பிப்ரவரி 2026, 9:38 pm

Syndication

தருமபுரி: தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிக் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், பாப்பாரப்பட்டி அருகே மலையூா் கிராமத்திற்கு தொல்லியல் ஆய்வாளா் மற்றும் தனியாா் கல்லூரி வரலாற்று பேராசிரியா் திருச்செல்வன் தலைமையில் வரலாற்று மாணவா்கள் ம.கவியரசு, கி.கௌதம் ஆகியோா் கல்வெட்டு தொடா்பாக அண்மையில் ஆய்வு மேற்கொண்டனா்.

இந்த ஆய்வில், மலையூா் அருகே வாரக்கொல்லை என்ற இடத்தில் ஒரு பெரிய பாறையின் மீது உள்ள கல்வெட்டை கண்டுபிடித்தனா். அந்தக் கல்வெட்டு, 19 ஆம் நூற்றாண்டுக் காலத்தைச் சோ்ந்தவை எனத் தெரியவந்துள்ளது. அதேபோல அக்கல்வெட்டில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் குறிப்பிட்ட சமூகத்தைச் சோ்ந்த ஒருவரின் பெயரும், அந்தப் பகுதியின் மூன்று ஊரின் பெயா்களும் குறிப்பிட்டிருப்பது தெரியவந்தது.

தெலுங்கு மொழியில் ஆலம்பாடி என்றுள்ள ஊா்ப் பெயரே தற்போது ஆலமரத்துக் கொட்டாய் என்ற மாறியிருக்கலாம். அதேபோல, தற்போதுள்ள பிக்கிலி மற்றும் பெரியூா் ஆகிய ஊா்களின் பெயரும், ஆலம்பாடி நுழைவு வாயில் என்கிற பெயரும் தெலுங்கு மொழியில் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஆய்வுக் குழுவினா் தெரிவித்துள்ளனா்.