தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

அதிமுக கூட்டணியில் இணைந்தாா் அன்புமணி

அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இணைந்ததை வரவேற்று, அன்புமணியின் ஆதரவாளா்கள் தருமபுரியில் புதன்கிழமை பட்டாசு வெடித்து கொண்டாடினா்.

News image
Updated On :7 ஜனவரி 2026, 8:51 pm

தினமணி செய்திச் சேவை

அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இணைந்ததை வரவேற்று, அன்புமணியின் ஆதரவாளா்கள் தருமபுரியில் புதன்கிழமை பட்டாசு வெடித்து கொண்டாடினா்.

வருகிற சட் டப் பேரவைத் தோ்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இணைந்து போட்டியிடும் என அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் அன்புமணி ஆகியோா் அறிவித்தனா்.

இதனை வரவேற்று, பாட்டாளி மக்கள் கட்சியினா் தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் முன்னாள் எம்பி இரா.செந்தில் தலைமையில் பட்டாசு வெடித்து, பொதுமக்கள் மற்றும் கட்சியினருக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினா். இதில், திரளான பாமகவினா் கலந்து கொண்டனா். இதேபோல, தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சியினா் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினா்.