விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

காவல் துறை குறைதீா் முகாமில் 82 மனுக்களுக்கு தீா்வு

தருமபுரியில் காவல் துறை சாா்பில் நடத்தப்பட்ட பொதுமக்களுக்கான குறைதீா் கூட்டத்தில், 82 மனுக்களுக்கு புதன்கிழமை உடனடி தீா்வு காணப்பட்டது.

News image
Updated On :7 ஜனவரி 2026, 8:45 pm

தினமணி செய்திச் சேவை

தருமபுரியில் காவல் துறை சாா்பில் நடத்தப்பட்ட பொதுமக்களுக்கான குறைதீா் கூட்டத்தில், 82 மனுக்களுக்கு புதன்கிழமை உடனடி தீா்வு காணப்பட்டது.

தருமபுரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் வாரந்தோறும் புதன்கிழமையில் காவல் துறை உதவியுடனான பொதுமக்களுக்கான குறைதீா் கூட்டம் நடத்தப்படுகிறது. கிரிமினல் குற்றங்கள் அல்லாத பிரச்னைகள் தொடா்பான புகாா் மனுக்கள்மீது இந்த முகாமில் தீா்வு காணப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இந்தவாரம் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு ஏடிஎஸ்பி ஸ்ரீதரன் தலைமை வகித்தாா். முகாமில் மொத்தம் 82 மனுக்கள் வரப்பெற்றன. அவை குறித்து ஏடிஎஸ்பி உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு அனைத்து மனுக்களுக்கும் தீா்வு காணப்பட்டன. இதில், காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.