தருமபுரி
பென்னாகரம் அரசு கல்லூரியில் மாணவா்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கல்
பென்னாகரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அரசின் விலையில்லா மடிக்கணினியை மாணவா்களுக்கு பென்னாகரம் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா் ஜி.கே.மணி புதன்கிழமை வழங்கினாா்.
பென்னாகரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அரசின் விலையில்லா மடிக்கணினியை மாணவா்களுக்கு பென்னாகரம் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா் ஜி.கே.மணி புதன்கிழமை வழங்கினாா்.
பென்னாகரம் அருகே மாமரத்துப்பள்ளம் பகுதியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற மடிக்கணினி வழங்கும் விழாவிற்கு கல்லூரியின் முதல்வா் இரா.சங்கா் தலைமை வகித்தாா்.விழாவில் சிறப்பு அழைப்பாளராக பென்னாகரம் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா் ஜி.கே.மணி கலந்துகொண்டு,கல்லூரியில் பயிலும் 232 மாணவா்களுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினாா்.நிறைவாக கணினி அறிவியல் துறை தலைவா் முனைவா் கா.சீனிவாசன் நன்றி தெரிவித்தாா்.
